Advertisement
Advertisement

Gulbadin naib

நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!
Image Source: Google
Advertisement

நான் கிட்டத்தட்ட சிரித்து சிரித்து அழுது விட்டேன்- குல்பதீன் செயல் குறித்து மார்ஷ்!

By Bharathi Kannan June 26, 2024 • 13:33 PM View: 130

ஆஃப்கானிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 8 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஆஃப்கானிஸ்தானின் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது.  

இந்நிலையில், இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் குல்பதீன் நைப் செய்த செயல் ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின் வங்கதேச அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை ஆஃப்கான் தரப்பில் நூர் அஹ்மத் வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை அவர் வீச முன்வருகையில், மழை வருவதை கவனித்த ஆஃப்கான் அணி பயிற்சியாளர் ஜானதன் டிராட் வீரர்களை சிறுது நேரம் பந்துவீச்சாமல் தாமதப்படுத்துமாறு சிக்னலை கொடுக்க எந்த வீரரும் முதலில் அதனை கவனிக்கவில்லை. 

Advertisement

Related Cricket News on Gulbadin naib

Advertisement