Odi world cup
பும்ராவால் ஷாஹினுக்கு நிகராக வர முடியது - அப்துல் ரசாக்!
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இருவரும் மூன்று வித போட்டிகளிலும் பந்துவீச்சின் மூலம் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அதேநேரத்தில், இருவரும் சமீபகாலமாக அவ்வப்போது காயம் ஏற்பட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
காயம் காரணமாக, இருவருமே கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. சாஹின் அஃப்ரிடி 3 மாத காலத்திற்குப் பின் டிசம்பர் மாதத்தில் இருந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், பும்ராவைவிட, சாஹின் அப்ரிடி சிறந்தவர் என முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.