Smaran ravichandran
VHT2025: ஹரியானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணியில் தொடக்க வீரர் அர்ஷ் ரங்கா 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஹிமான்ஷு ரானா மற்றும் கேப்டன் அங்கித் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கித் குமார் 48 ரன்களிலும், ஹிமான்ஷு ரானா 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சிந்து 10 ரன்களுக்கும், பார்த் வட்ஸ் 8 ரன்களுக்கும், தினேஷ் பானா 20 ரன்னிலும், ராகுல் திவேத்தியா 22 ரன்னிலும், சுமித் குமார் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த அனுஜ் 23 ரன்களைச் சேர்த்தார்.
Related Cricket News on Smaran ravichandran
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31