Guj vs ker
ரஞ்சி கோப்பை 2025: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை!
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் முதல் அரையிறுதி போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் 457 ரன்களைக் குவித்த நிலையில் ஆல் அவுட்டனது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது அசாருதீன் 20 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 177 ரன்களையும், கேப்டன் சச்சின் பேசி 69 ரன்களையும், சல்மான் நிஷார் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். குஜராத் அணி தரப்பில் நாக்வஸ்வல்லா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் சிந்தன் கஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய குஜராத் அணிக்கு பிரியங்க் பாஞ்சல் - ஆர்யா தேசாய் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Guj vs ker
-
ரஞ்சி கோப்பை 2025: முன்னிலை நோக்கி நகரும் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: கேரளா அணி 457 ரன்களில் ஆல் அவுட்; ரன் குவிப்பில் குஜராத் அணி!
கேரளா அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: அசாருதீன் அபார சதம்; வலிமையான நிலையில் கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: சச்சின் பேபி அரைசதம்; சரிவிலிருந்து மீண்ட கேரளா!
குஜராத் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் கேரளா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31