Saurashtra u23
கிட் பேக்கில் மதுபானம் கொண்டு சென்ற வீரர்கள்; சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான அண்டர் 23 வீரர்களுக்காக நடத்தப்படும் சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் ஜனவரி 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற போட்டியில் சௌராஷ்டிரா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து சௌராஷ்டிரா அணி வீரர்கள் சொந்த ஊர் திரும்ப விமானம் மூலம் புறப்பட சண்டிகர் விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வீரர்களது உடமைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் வீரர்களின் கிட் பேக்கில் மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சௌராஷ்டிரா கிரிக்கெட் அணியையைச் சேர்ந்த ஐந்து வீரர்களின் கிட் பேக்கில் இருந்து 27 மதுபாட்டிகள் மற்றும் 2 பீர் பட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திடம் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Saurashtra u23
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31