Shafali verma india women vs so
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்த இந்தியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது நவி மும்பையில் உள்ள டி ஓய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தர்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதத்தை நெருங்கிய ஷஃபாலி வர்மா 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on Shafali verma india women vs so
Cricket Special Today
- 
                    
- 06 Feb 2021 04:31